திருமணம் தொடர்பாக வதந்தி: சுனைனா சாடல்

By செய்திப்பிரிவு

திருமணம் தொடர்பாகத் தொடர்ச்சியாக வதந்தி பரவி வருவதை, நாயகி சுனைனா சாடியுள்ளார்.

தெலுங்கு திரையுலகில் நாயகியாக அறிமுகமானாலும், தமிழில் 'காதலில் விழுந்தேன்' படத்தின் நாயகியாக அறிமுகமானார் சுனைனா. அதனைத் தொடர்ந்து 'மாசிலாமணி', 'வம்சம்', 'திருத்தணி', 'நீர்ப்பறவை' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சரியான கதாபாத்திரங்கள் அமையாதக் காரணத்தில் வெப் சீரிஸிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார். தற்போது ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'சில்லு கருப்பட்டி' படத்தில் இவருடைய நடிப்புக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இதனிடையே அவ்வப்போது இவருக்குத் திருமணமாகி விட்டது, திருமணம் முடிவாகிவிட்டது என்று வதந்திகள் பரவும். அதற்கு விளக்கமளித்து வந்தார் சுனைனா. தற்போது மீண்டும் அவருக்கு திருமணமாகிவிட்டது என்று வதந்தி பரவியது.

இது தொடர்பாக சுனைனா, "எனக்குத் திருமணமாகி விட்டதாக தகவல் பரவி வருகிறது. பலரும் இது தொடர்பாக என்னிடம் விசாரித்த வண்ணமிருக்கிறார்கள். இது மிகவும் வருத்தம் அளிக்கிறது. திருமணம் தொடர்பான தகவலில் உண்மையில்லை. இது வெறும் வதந்தி தான்.

இந்த வதந்தி எப்படி உருவானது, யார் உருவாக்கினார்கள் என்று தெரியவில்லை. எனது திருமணம் ரகசியமாக நடைபெறாது. மாப்பிள்ளை முடிவானதும், முறையாக அறிவித்துத் தான் திருமணம் செய்வேன்” என்று தெரிவித்துள்ளார் சுனைனா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுலா

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்