பாரதிராஜா இயக்கத்தில் படமாக உருவாகவிருந்த 'குற்றப் பரம்பரை' கைவிடப்பட்டு, வெப் சீரிஸாக உருவாகவுள்ளது.
சில வருடங்களுக்கு முன்பு, 'குற்றப் பரம்பரை' கதையை யார் படமாக எடுப்பது என்பதில் இயக்குநர்கள் பாரதிராஜா - பாலா இருவருக்கும் மோதல் வெடித்தது. இருவருமே மேடைகள் வழியே கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால், இறுதியாக பாரதிராஜா தேனியில் 'குற்றப் பரம்பரை' படத்துக்கு முதல் ஆளாக பூஜை போட்டார்.
பூஜை போட்டதோடு சரி, படப்பிடிப்பு தற்போதுவரை தொடங்கப்படாமலேயே இருக்கிறது. பாரதிராஜாவும் தன் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அதேபோல், பாலாவும் 'குற்றப் பரம்பரை' முயற்சியைத் தள்ளிவைத்துவிட்டு, தன் அடுத்த படத்தின் வேலைகளைத் தொடங்கினார்.
இந்நிலையில், படமாக்கும் முயற்சியைக் கைவிட்டு, 'குற்றப் பரம்பரை' கதையை வெப் சீரிஸாக எடுக்க முடிவு செய்துள்ளார் பாரதிராஜா. அவரே நடித்து, இயக்கவுள்ள இந்த வெப் சீரிஸை, சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.
இது தொடர்பாக சுரேஷ் காமாட்சி, “பாரதிராஜாவின் நீண்ட கால ஆசை, திரை வடிவம் பெற உள்ளது. பிரம்மாண்ட வலைத் தொடராக ‘குற்றப் பரம்பரை’ வெளிவர உள்ளது. படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது” என்று தெரிவித்துள்ளார். தற்போது, பாரதிராஜாவுடன் நடிக்க உள்ளவர்கள் தேர்வு தொடங்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
16 mins ago
சினிமா
33 mins ago
க்ரைம்
27 mins ago
தமிழகம்
18 mins ago
சினிமா
42 mins ago
இந்தியா
2 mins ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago