விஜய்யின் 65-வது படத்தை இயக்கவுள்ளதாக வெளியான செய்திக்கு இயக்குநர் பேரரசு விளக்கமளித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம், அவரது 64-வது படமாகும். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஷிமோகாவில் நடைபெற்று வருகிறது. மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்தப் படத்தை சேவியர் பிரிட்டோர் தயாரித்து வருகிறார். ஏப்ரல் வெளியீடாக இந்தப் படம் திரைக்கு வரவுள்ளது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகும் 'தளபதி 65' படம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமுள்ளன. இதில் இயக்குநர் பேரரசுவின் பெயர் நீண்ட நாட்களாக அடிப்பட்டுக் கொண்டிருக்கிறது. விஜய்யை வைத்து 'திருப்பாச்சி' மற்றும் 'சிவகாசி' ஆகிய ஹிட் படங்களைக் கொடுத்தவர் என்பதால், இந்தக் கூட்டணி சாத்தியம் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தார்கள்.
தற்போது விஜய்யின் அடுத்த படத்தை இயக்கவுள்ளது தொடர்பான செய்திக்கு விளக்கமளித்துள்ளார் இயக்குநர் பேரரசு. இது தொடர்பாக, "அது நடந்தால் நல்ல விஷயம். விஜய் சாரிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். கதை ஒன்று தயாராகிவிட்டது. அவர் எப்போது நேரம் கொடுக்கிறாரா, அப்போது போய் சொல்லிவிடுவேன். நான் எதிர்பார்க்காத போது விஜய் சார் படம் கிடைத்தது. இப்போது நான் எதிர்பார்க்கிறேன். ஆனால் தாமதமாகிறது.
இன்று விஜய் விஸ்வரூபம் எடுத்துவிட்டார். இப்போது 'திருப்பாச்சி', 'சிவகாசி' எனப் படங்கள் எடுத்தால் வேலைக்கு ஆகாது. அதைவிடப் பெரிய வளர்ச்சி அடைந்துவிட்டார். அன்றைக்குச் செடிக்குத் தண்ணீர் ஊற்றுவதற்கும், இன்றைக்கு மரத்துக்கு உரம் வைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
இப்போது விஜய் சாரை வைத்து படம் பண்ணினால், சமுதாயப் பிரச்சினை ஒன்றை எடுத்து சமுதாய அக்கறையோடு வேறு மாதிரி ஒன்று பண்ணனும். அப்படியொரு கதை தயாராக வைத்துள்ளேன். சொல்வோம், வெல்வோம்" என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் பேரரசு
முக்கிய செய்திகள்
தமிழகம்
40 mins ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
வாழ்வியல்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago