சாமி தரிசனத்துக்குப் பின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நயன்தாரா

By செய்திப்பிரிவு

சாமி தரிசனத்துக்குப் பின் ‘மூக்குத்தி அம்மன்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் நயன்தாரா.

ஆர்.ஜே. பாலாஜி நாயகனாக நடித்து வெளியான ‘எல்.கே.ஜி’ படம், மக்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் கதை, திரைக்கதையைத் தனது நண்பர்களுடன் சேர்ந்து உருவாக்கினார் ஆர்.ஜே. பாலாஜி. இந்தப் படத்தைத் தயாரித்த வேல்ஸ் நிறுவனம், ஆர்.ஜே. பாலாஜியின் அடுத்த படத்தையும் தயாரிக்க முன்வந்தது.

அதைத் தொடர்ந்து, இந்தப் படத்தின் கதையையும் தனது நண்பர்களுடன் சேர்ந்து உருவாக்கியுள்ளார் ஆர்.ஜே. பாலாஜி. ‘மூக்குத்தி அம்மன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்ட இந்தப் படத்தில், அவரே ஹீரோவாக நடிக்கிறார். அத்துடன், என்.ஜே.சரவணனுடன் இணைந்து படத்தையும் இயக்கி வருகிறார். இவர்கள் இருவரும் ‘எல்.கே.ஜி’ படத்தில் முதல்நிலை உதவி இயக்குநர்களாகப் பணிபுரிந்தவர்கள்.

இந்தப் படத்தில், மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு, கடந்த நவம்பர் 29-ம் தேதி நாகர்கோவிலில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். சண்டை இயக்குநராக ஸ்டண்ட் சில்வா, எடிட்டராக ஆர்.கே.செல்வா பணிபுரிகின்றனர்.

இந்நிலையில், இன்று (டிசம்பர் 11) முதல் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் நயன்தாரா. முன்னதாக, கன்னியாகுமரியில் உள்ள மூக்குத்தி அம்மன், திருச்செந்தூர் முருகன் ஆகிய கோயில்களில் சாமி தரிசனம் செய்தார். அம்மனாக நடிப்பதால், சாமி தரிசனம் செய்து பயபக்தியுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

இந்தப் படத்துக்காக விரதம் இருந்து நடிக்கிறார் நயன்தாரா என ஏற்கெனவே ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

9 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

33 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

53 mins ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

1 hour ago

மேலும்