'எல்.கே.ஜி' படத்தைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி எழுதி வரும் கதையில் நயன்தாரா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
கே.ஆர்.பிரபு இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, நாஞ்சில் சம்பத், ராம்குமார், மயில்சாமி, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'எல்.கே.ஜி'. வேல்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தின் கதை மற்றும் திரைக்கதை ஆர்.ஜே.பாலாஜி தனது நண்பர்களுடன் இணைந்து எழுதியிருந்தார். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி தனது அடுத்த படத்துக்கான கதையை நண்பர்களுடன் இணைந்து எழுதத் தொடங்கினார். இதன் பணிகள் நாகர்கோவிலில் நடைபெற்று வந்தன. இந்தப் படத்தையும் வேல்ஸ் நிறுவனமே தயாரிக்க முன்வந்தது.
தற்போது அதன் கதை மற்றும் திரைக்கதை பணிகள் முடிவடைந்து, பிரதான நடிகர்கள் ஒப்பந்தம் நடைபெற்றுள்ளது. 'மூக்குத்தி அம்மன்' என்ற பெயரில் உருவாகவுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக இருந்தாலும், படத்தின் கதையோட்டமே நயன்தாராவை முன்னிலைப்படுத்தித்தான் இருக்கும் என்கிறது படக்குழு.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த 'நானும் ரவுடிதான்' படத்தின் மூலமாகத்தான் பிரதான நடிகராக வலம் வரத் தொடங்கினார் ஆர்.ஜே.பாலாஜி. அதிலிருந்தே விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரிடமும் நெருங்கிய நட்பு பாராட்டி வருகிறார். அந்த நட்பின் மூலமாக இந்தப் படத்தில் நயன்தாரா நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
இந்தியா
25 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
43 mins ago
இந்தியா
50 mins ago
இந்தியா
46 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago