ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி வரும் 'க/பெ. ரணசிங்கம்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு ஜனவரியில் வெளியாகவுள்ளது.
'நம்ம வீட்டுப் பிள்ளை' படப்பிடிப்பை முடித்துவிட்டு, ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வரும் படம் 'க/பெ. ரணசிங்கம்'. பெ.விருமாண்டி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கெளரவ கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தார். பல்வேறு படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்த பெரிய கருப்பத்தேவரின் மகன் தான் இயக்குநர் பெ.விருமாண்டி என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் சேதுபதி காட்சிகளைத் தவிர்த்து இதரக் காட்சிகள் அனைத்துக்குமான படப்பிடிப்பு ராமநாதபுரத்தில் மும்முரமாக நடைபெற்று வந்தது. கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சமுத்திரக்கனி, 'பூ' ராம், வேல.ராமமூர்த்தி, பவானி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தற்போது விஜய் சேதுபதி - ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கத் தொடங்கியுள்ளது படக்குழு. இது தான் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும், 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் படம் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
கல்வி
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
சினிமா
9 hours ago
சுற்றுச்சூழல்
10 hours ago
உலகம்
10 hours ago
வாழ்வியல்
10 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago