விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'பிகில்' படத்தில் கடைசி 7 நிமிடங்கள் முழுக்க படம் உருவான விதத்தைக் காட்டவுள்ளது படக்குழு.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'பிகில்'. தணிக்கை அதிகாரிகள் இந்தப் படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் கொடுத்துவிட்டாலும், படத்தின் வெளியீட்டுத் தேதி இன்னும் முடிவாகவில்லை. அக்டோபர் 25-ம் தேதி வெளியிடலாம் என்று முடிவு செய்துள்ளனர்.
தணிக்கைச் சான்றிதழ் மூலம் இந்தப் படம் 2 மணி நேரம் 59 நிமிடங்கள் ஓடக் கூடிய படம் என்பது தெளிவாகிறது. ஆனால், இந்தப் படத்துக்காக விஜய்யின் உழைப்பு, படப்பிடிப்பு, கிராபிக்ஸ் பணிகள் உள்ளிட்ட பல விஷயங்களைப் பொதுமக்களுக்குக் காட்ட முடிவு செய்தது படக்குழு.
அதன்படி, படத்தின் கதையோட்டம் அளவு 2 மணி நேரம் 52 நிமிடங்கள் தான். கடைசி 7 நிமிடங்கள் முழுக்க படத்தில் பணிபுரிந்தவர்கள் பெயர்களோடு, படத்தின் மேக்கிங் வீடியோவை இணைத்துள்ளனர். கண்டிப்பாக இது பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்துவது மட்டுமன்றி, விஜய் இதில் இடம்பெற்றுள்ள கால்பந்தாட்டக் காட்சிகளுக்கு எவ்வளவு மெனக்கெட்டுள்ளார் என்பதும் விளங்கும் எனத் தெரிவித்தார்கள்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் இணையத்திலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. படத்தின் முதல் பிரதி எடுக்கும் பணிகளில் மும்முரமாகப் பணிபுரிந்து வருகிறது படக்குழு. இறுதிக்கட்ட வேலைகள் எனக் கூறப்படும் சிறு சிறு கிராபிக்ஸ் மெருகேற்றுதல் உள்ளிட்டவை மட்டுமே நடைபெற்று வருகின்றன. அது முடிவடைந்துவிட்டதால், முதல் பிரதி எடுத்து வெளிநாட்டுத் தணிக்கைக்கு முதலில் அனுப்பப்படும்.
அதனைத் தொடர்ந்து படத்தை விளம்பரப்படுத்தி, இங்குள்ள திரையரங்குகளுக்கு அனுப்பப் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். 'பிகில்' படத்துக்குப் பெரும் உழைப்பைக் கொடுத்திருப்பதால், இதற்குப் பிறகு ஒரு மாத கால அளவுக்கு ஓய்வெடுக்க முடிவு செய்திருக்கிறார் அட்லீ. அதற்குப் பிறகே ஷாரூக் கான் நடிக்கும் படத்தின் பணிகளைக் கவனிக்க முடிவு செய்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
4 hours ago
வாழ்வியல்
4 hours ago
தமிழகம்
4 hours ago
ஆன்மிகம்
4 hours ago
கருத்துப் பேழை
5 hours ago