'இந்தியன் 2' படப்பிடிப்புத் தளத்தில் ஷங்கருடன் அனில் கபூர் இருப்பது போன்ற புகைப்படம் வெளியானதால், அவர் நடிப்பதாகத் தகவல் வெளியானது.
ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'இந்தியன் 2'. ஆரம்பக்கட்டத்தில் நிலவிய சிக்கல்களைத் தொடர்ந்து, தற்போது தான் தொடர் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
ராஜமுந்திரி சிறையில் சில காட்சிகளைப் படமாக்கிவிட்டு, சென்னை திருவல்லிக்கேணியில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. தற்போது ஸ்ரீபெரும்புதூரில் 'இந்தியன் 2' படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளனர். இதில் கமல், ப்ரியா பவானி சங்கர் காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள்.
இதனிடையே, நேற்றிரவு (செப்டம்பர் 31) முதல் ஷங்கருடன் அனில் கபூர் இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது. பலரும் அனில் கபூர் தமிழில் நடிக்கும் முதல் படம் என்றெல்லாம் செய்திகளை வெளியிட்டனர்.
இது தொடர்பாக விசாரித்த போது, ''திருவல்லிக்கேணியில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது 'இந்தியன் 2' படப்பிடிப்புக்கு அனில் கபூர் வந்துள்ளார். அங்கு கமலுடன் சில மணி நேரம் பேசிவிட்டுச் சென்றுள்ளார். மற்றபடி அவர் 'இந்தியன் 2' படத்தில் எல்லாம் நடிக்கவில்லை'' என்று தெரிவித்தார்கள்.
கமலுடன் நீண்ட நேரம் பேசியுள்ளதால், 'தலைவன் இருக்கின்றான்' படத்தில் அனில் கபூர் நடிக்கப் போகிறாரா என்பது விரைவில் தெரியவரும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
வணிகம்
4 hours ago
விளையாட்டு
5 hours ago
தொழில்நுட்பம்
5 hours ago
சினிமா
6 hours ago
க்ரைம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
இந்தியா
7 hours ago
க்ரைம்
8 hours ago