சிபிராஜ் நடிக்கவுள்ள புதிய படத்துக்கு ‘ரேஞ்சர்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
சிபிராஜ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘சத்யா’. 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தப் படம் வெளியானது. தொடர்ந்து, ‘ரங்கா’, ‘மாயோன்’, ‘வால்டர்’ ஆகிய படங்களிலும், பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார் சிபிராஜ்.
பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் படத்தில், சத்யராஜும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘ஜாக்சன் துரை’ படத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கும் படம் இது. ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியாக சத்யராஜ் நடிக்க, பத்திரிகையாளராக நாசர் நடிக்கிறார். கன்னடத்தில் வெளியான ‘கவலுதாரி’ படத்தின் ரீமேக் இது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து, ‘ஜாக்சன் துரை’ இயக்குநர் தரணிதரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிபிராஜ். ‘ரேஞ்சர்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், ரம்யா நம்பீசன் மற்றும் மதுஷாலினி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.
ஆரா சினிமாஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, அரோல் கரோலி இசையமைக்கிறார். கல்யாண் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்ய, சிவா நந்தீஸ்வரன் எடிட் செய்கிறார். சிஜி மற்றும் விஎஃப்எக்ஸ் காட்சிகள் படத்தில் நிறைய இடம்பெறுவதால், ஹாலிவுட்டைச் சேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் இதில் பணிபுரியவுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் யாவாத்மல் மாவட்டத்தில் ஆவ்னி எனும் புலி பல மனிதர்களை உயிருடன் அடித்துக்கொன்று தின்ற சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் தயாராகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
6 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
10 hours ago