'ஆவ்' படத்தின் 2-ம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜய் சேதுபதி
பிரசாந்த் வர்மா இயக்கத்தில் காஜல் அகர்வால், நித்யா மேனன், ரெஜினா, முரளி ஷர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான தெலுங்கு படம் 'ஆவ்'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தை நானி தயாரித்திருந்தார். சிறந்த மேக்கப் மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் ஆகியவற்றுக்கான தேசிய விருதையும் இந்தப் படம் வென்றுள்ளது.
தற்போது இந்தப் படத்தின் 2-ம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் இயக்குநர் பிரசாந்த் வர்மா. இதில் காஜல் அகர்வால் நடிப்பது உறுதியாகியுள்ளது. அவருடன் இணைந்து நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் இயக்குநர் பிரசாந்த் வர்மா.
இதர நடிகர்கள் அனைத்தையும் முடிவு செய்துவிட்டு, எப்போது படப்பிடிப்பு என்று முடிவு செய்துவிட்டுக் கூறுங்கள் என விஜய் சேதுபதி கூறியுள்ளார். இதனால் அவர் ஒப்பந்தமாவார் எனத் தெரிகிறது.
சிரஞ்சீவி நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் 'சைரா நரசிம்மா ரெட்டி' படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகில் அறிமுகமாகிறார் விஜய் சேதுபதி.
இதனைத் தொடர்ந்து 'உபேனா' என்னும் படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பில் தான் தற்போது விஜய் சேதுபதி உள்ளார். தெலுங்கில் விஜய் சேதுபதி நடிக்கும் 3-வது படமாக 'ஆவ் 2' இருக்கும் எனத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
க்ரைம்
21 mins ago
சுற்றுச்சூழல்
27 mins ago
இந்தியா
58 mins ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
வர்த்தக உலகம்
1 hour ago
ஆன்மிகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago