பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் - ராஜ்கிரண்

By செய்திப்பிரிவு

பொன்ராம் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் சசிகுமார் - ராஜ்கிரண் இணைந்து நடிக்கவுள்ளனர்.

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சூரி, சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் 'சீமராஜா'. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. 

இந்தப் படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் இயக்குநர் பொன்ராம். முதலில் தயாரித்த கதையில் நடிக்க விஜய் சேதுபதி சம்மதம் தெரிவித்தார். சன் பிக்சர்ஸ் தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், தற்போது விஜய் சேதுபதி பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளதால் இந்தப் படம் ஆரம்பிக்க சில காலங்களாகும் எனத் தெரிகிறது.

விஜய் சேதுபதி படத்துக்கு முன்பாக, புதிய படமொன்றை இயக்க முடிவு செய்துள்ளார் பொன்ராம். அந்தக் கதையில் சசிகுமார் மற்றும் ராஜ்கிரண் இணைந்து நடிக்கவுள்ளனர். இதற்கான முதற்கட்டப் பணி மும்முரமாக தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

முதலில் ராஜ்கிரண் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை என்றால், பாரதிராஜாவை அணுகலாம் என்று தான் படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால், ’ரஜினி முருகன்’ படத்தின் நட்பால் ராஜ்கிரண் உடனடியாக சம்மதம் தெரிவித்துவிட்டார். இதனைத் தொடர்ந்து பாரதிராஜாவை நடிக்க வைக்கலாம் என்ற முடிவைக் கைவிட்டுள்ளது படக்குழு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

3 mins ago

க்ரைம்

12 mins ago

இந்தியா

8 mins ago

இந்தியா

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்