'அப்பா' படத்தைத் தொடர்ந்து, அதன் 2-ம் பாகத்தை உருவாக்க இயக்குநர் சமுத்திரக்கனி திட்டமிட்டுள்ளார்.
சமுத்திரக்கனி, தம்பி ராமையா, நமோ நாராயணா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அப்பா'. 2016-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது. குறைந்த முதலீடு என்பதால்,விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபம் கிடைத்தது.
தனியார் பள்ளிகளில் நடக்கும் அவலங்களை முன்வைத்து இந்தப் படத்தை இயக்கி, நடித்திருந்தார் சமுத்திரக்கனி. தற்போது 'அப்பா' படத்தின் 2-ம் பாகத்தை உருவாக்க சமுத்திரக்கனி திட்டமிட்டுள்ளார். இதன் முதற்கட்டப் பணிகளை முடித்துவிட்டார்.
'அப்பா 2' படத்தின் கதையை கல்லூரியில் நடக்கும் அவலங்களை முன்வைத்து உருவாக்கவுள்ளார். முதல் பாகம் போலவே 2-ம் பாகத்தையும் குறைந்த செலவிலேயே உருவாக்கவுள்ளார். 'நாடோடிகள் 2' படத்தின் இறுதிகட்டப் பணிகள் மற்றும் நடித்து வரும் படங்களின் பணிகளை முடித்துவிட்டு 'அப்பா 2'வில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார் சமுத்திரக்கனி.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
சினிமா
7 hours ago
சுற்றுச்சூழல்
8 hours ago
உலகம்
9 hours ago
வாழ்வியல்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
சினிமா
11 hours ago