பாலசந்தரின் நிழலில் வளர்ந்தவர்கள் நாங்கள்: ஸ்ரீதேவி புகழஞ்சலி

By செய்திப்பிரிவு

'இயக்குநர் சிகரம்' என்று அழைக்கப்படும் கே.பாலசந்தரின் உடலுக்கு தலைவர்கள், திரைக்கலைஞர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கே.பாலசந்தர் இயக்கத்தில் ரஜினி, கமல், ஸ்ரீதேவி ஆகியோர் நடித்த படம் 'மூன்று முடிச்சு'.மறைந்த இயக்குநர் கே.பாலசந்தருக்கு ட்விட்டர் தளம் மூலமாக தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்திருக்கிறார் நடிகர் ஸ்ரீதேவி.

விடுமுறைக்காக துபாயில் இருக்கும் ஸ்ரீதேவி, "பாலசந்தர் சார் மறைந்து விட்டார். பாலசந்தர் இறந்தாலும் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். எங்களுக்கு நடிக்க வாய்ப்பு அளித்தும், வழிக்காட்டியாகவும் இருந்தவர் அவர்.

அவருடைய படங்களும், அவர் எடுக்கும் முடிவுகளும் வலுவானவை. ஒரு நாள் ஒரு குழந்தை நட்சத்திரத்தை கதாநாயகியாக முடிவு செய்தார். 'மூன்று முடிச்சு' என் வாழ்க்கையை மாற்றி அமைத்தது.

தமிழ் சினிமாவும், நாங்களும் அவரது நிழலில் தான் வளர்ந்தோம். நம் மனங்களில் அவர் எப்போதும் வாழ்கிறார்" என்று தெரிவித்திருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

தமிழகம்

6 mins ago

சினிமா

12 mins ago

கருத்துப் பேழை

2 mins ago

தமிழகம்

27 mins ago

இந்தியா

19 mins ago

இந்தியா

52 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இலக்கியம்

8 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்