இயக்குநர் சங்கத்தின் தலைவர் பதவியைத் தவிர மற்ற நிர்வாகிகளைத் தேர்வுசெய்ய வருகிற ஜூலை 14-ம் தேதி தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், தலைவர் பதவிக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட இயக்குநர் பாரதிராஜாவின் திடீர் ராஜினாமாவைத் தொடர்ந்து தேர்தல் ஜூலை 21-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், ‘இயக்குநர் சங்கத்துக்கு முறைப்படி தேர்தல் நடத்தப்படுவதே நல்லது!’ என ஒரு பத்திரிகைப் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
இயக்குநர் பாரதிராஜா ராஜினாமா செய்ததை அடுத்து, அப்பதவிக்கு ஜனநாதனையே போட்டியிட வைக்கலாம் என பலர் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதுகுறித்து, அவரிடம் கேட்டபோது, ‘‘பாரதிராஜா விலக வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. தேர்தல் முறை நன்றாக இருந்தால் நல்லது. அதற்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தேன். தேர்தலில் போட்டியிட வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு இல்லை’’ இவ்வாறு தெரிவித்திருந்தார். இந்நிலையில் வரும் 8-ம் தேதி இயக்குநர் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் கூடவுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
4 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago