ஸ்ரீதேவியின் நடிப்பைப் பார்த்து உந்துதலோடு நடித்தேன்: ஜனனி ஐயர்

By ஸ்கிரீனன்

ஸ்ரீதேவியின் நடிப்பைப் பார்த்து உந்துதலோடு 'பலூன்' படத்தின் கதாபாத்திரத்தில் நடித்ததாக ஜனனி ஐயர் தெரிவித்துள்ளார்.

'பலூன்' படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீஸருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மேலும் செப்டம்பர் 27-ல் வெளியீடு என்று அதிகாரப்பூர்வமாக படக்குழு தெரிவித்துள்ளது.

சினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை 70 எம்.எம் நிறுவனம் மற்றும் பார்மெர்ஸ் மாஸ்டர் ப்ளான் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கிறது. இதன் வெளியீட்டு உரிமையை ஆரோ சினிமாஸ் கைப்பற்றியுள்ளது.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜனனி ஐயர் தனது கதாபாத்திரம் குறித்து கூறியிருப்பதாவது:

என்னுடைய கதாபாத்திரம் 1980-களின் பிண்ணனியில், கொடைக்கானலில் வாழும் ஒரு பெண்ணைப் பற்றியது. மிகவும் கட்டு கோப்பான, ஜெய்யை காதலிக்கும் பெண்ணாக நடித்துள்ளேன்.

இந்த கதாபாத்திரம் ’மூன்றாம் பிறை’ ஸ்ரீதேவியின் அப்பாவித்தனமான நடிப்பை சார்ந்து இருக்க வேண்டும் என்று இயக்குனர் விரும்பினார். காலம் தாண்டியும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும் அந்த நடிப்புக்கு ஈடு, இணை ஏதும் , வரவே முடியாது என்றும் நாங்கள் பேசி கொண்டோம்.

ஆயினும் நான் நடிக்கும் போது, ஸ்ரீதேவி மேடத்தின் நடிப்பை பார்த்து வந்த உந்துதல் என்னை சிறப்பாக நடிக்க வைத்தது எனலாம்.என்னை வெகுவாக கவர்ந்த கதாபாத்திரம் இது என்று சொல்லலாம். ரசிகர்கள் என் கதாபாத்திரத்தை நிச்சயம் ரசிப்பார்கள்.

இவ்வாறு ஜனனி ஐயர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

இந்தியா

28 mins ago

இந்தியா

55 mins ago

இந்தியா

30 mins ago

இந்தியா

40 mins ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்