அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் 'மெர்சல்' படத்தின் குழுவினர் அனைவருக்கும் தங்க நாணயம் பரிசளித்திருக்கிறார் விஜய்
'மெர்சல்' படத்துக்கு இன்னும் சுமார் 5 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஒரே ஒரு பாடல் மட்டுமே காட்சிப்படுத்த வேண்டியதுள்ளது.
இதனால் ஜூலை 31-ம் தேதி நடத்த படப்பிடிப்பின் போது, படக்குழுவினர் அனைவருக்கும் தங்க நாணயத்தை பரிசாக அளித்துள்ளார் விஜய். விரைவில் இறுதிக்கட்டக் படப்பிடிப்பையும், பாடல் படப்பிடிப்பையும் தொடங்க திட்டமிட்டு வருகிறது படக்குழு.
அனைத்துப் பாடல்களையும் ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்துவிட்டார். இறுதிக்கட்டப் படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு முன்பாக, படத்தின் எடிட்டிங் பணிகளை முடித்து ஏ.ஆர்.ரஹ்மானிடம் பின்னணி இசைக்கு அளிக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.
அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் 'மெர்சல்' படத்தில் எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், சத்யராஜ், வடிவேலு, யோகிபாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.
'மெர்சல்' படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் விஜய்.
முக்கிய செய்திகள்
இந்தியா
45 mins ago
விளையாட்டு
1 hour ago
கல்வி
2 hours ago
தமிழகம்
2 hours ago
கல்வி
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
சினிமா
3 hours ago
தமிழகம்
4 hours ago