பின்னணி இசைக்குப் பிறகு காட்சிகளை படமாக்க முடிவு செய்துள்ளார் சிம்பு. மேலும், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராக பணிபுரியவுள்ளார்.
'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு. தனது அடுத்த படம் குறித்து, "’கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்...’ 7 முறை வீழ்ந்தாலும் எட்டு முறை எழுந்து நில். விரைவில் தலைப்பு, மற்ற விவரங்கள் வெளியிடப்படும்.
பாடல்கள் இல்லை, இடைவேளை இல்லை. பாப்கார்ன், பாத்ரூம் என அனைத்தையும் படத்துக்கு முன்னால் முடித்துவிடுங்கள்.. செப்டம்பர் 2017 வெளியீடு" என்று ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் சிம்பு.
இந்நிலையில் புதுமையாக முதலில் காட்சியமைப்புகளுக்கு தகுந்தவாறு பின்னணி இசையை முடித்துவிட்டு, பிறகு படப்பிடிப்பு நடத்த முடிவு செய்துள்ளார் சிம்பு. இப்படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, யுவன் இசையமைக்க இருக்கிறார். எடிட்டிங் பணிகளை ஆண்டனி மேற்கொள்ளவுள்ளார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
58 mins ago
கல்வி
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
தமிழகம்
8 hours ago
சுற்றுச்சூழல்
8 hours ago
தமிழகம்
9 hours ago
க்ரைம்
9 hours ago