காவியத்தலைவன்-க்கு வரவேற்பு: சித்தார்த் நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

வசந்தபாலன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் 'காவியத்தலைவன்' படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பால் சித்தார்த் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

சித்தார்த், ப்ருத்விராஜ், நாசர், வேதிகா, அனைகா உள்ளிட்ட பலர் நடிக்க, வசந்தபாலன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் 'காவியத்தலைவன்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஒய் நாட் ஸ்டூடியோஸ் சசிகாந்த் தயாரித்திருக்கிறார். இப்படம் நவம்பர். 28ம் தேதி வெளியானது.

இப்படத்திற்கு மக்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. படம் பார்த்துவிட்டு ட்விட்டர் தளத்தில் பலரும் 'காவியத்தலைவன்' குழுவினருக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள்.

இது குறித்து நடிகர் சித்தார்த், "ஒரு நடிகனாக இத்தகைய அங்கீகாரத்தை நான் பெற இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கிறது. இயக்குநர் வசந்தபாலனுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். நன்றி வசந்தபாலன். இம்மாதிரியான படங்கள் மிகவும் அரிதானவை. சர்வதேச அளவில் இத்தகைய படங்கள் கொண்டாடப்படும். காவியத்தலைவன் திரைப்படத்தை பாருங்கள். 2014-ம் ஆண்டு எனக்கு சிறப்பாக அமைந்துள்ளது. முதலில் ஜிகர்தண்டா, இப்போது காவியத்தலைவன். விரைவில் எனக்குள் ஒருவன் திரைப்படமும் வெளியாகவிருக்கிறது" என்று நெகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

9 mins ago

இந்தியா

11 mins ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

க்ரைம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

கார்ட்டூன்

2 hours ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்