'நெஞ்சம் மறப்பதில்லை' வெளியீடு தயாரிப்பாளர் மதன் கையில்தான் உள்ளது என்று இயக்குநர் செல்வராகவன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் அனைத்துப் பணிகளும் முடிந்து, தணிக்கை செய்யப்பட்டு தயாராக இருக்கும் படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'. ஆனால் இதன் உரிமையைக் கைப்பற்றி இருக்கும் மதன் பணப் பிரச்சினையில் இருப்பதால், பட வெளியீடு தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.
சமூக வலைதளத்தில் செல்வராகவனிடம் தொடர்ச்சியாக பட வெளியீடு எப்போது என்று கேள்வி எழுப்பவே, தன்னுடைய விளக்கத்தை தெரிவித்துள்ளார் செல்வராகவன். அவர் ட்வீட்டியிருப்பதாவது:
'நெஞ்சம் மறப்பதில்லை' வெளியீடு குறித்து நீங்கள் விசாரிப்பது என் மனதைத் தொட்டது. விரைவில் வரும். ஆனால் வெளியீட்டு தேதி இயக்குநர் கையில் இல்லை. தயாரிப்பாளர் மதனுக்குதான் அது தெரியும்.
உங்கள் பொறுமைக்கும் நம்பிக்கைக்கும் நன்றி. ’நெஞ்சம் மறப்பதில்லை’ படத்துக்காக யுவன் ஷங்கர் ராஜா செய்துள்ள பின்னணி இசை பற்றி எனக்கு விவரிக்க வார்த்தைகள் இல்லை. ஒரு வார்த்தையில் சொல்வதென்றால், அட்டகாசம் !
இவ்வாறு தெரிவித்துள்ளார் செல்வராகவன்
எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'. யுவன் இசையமைத்துள்ள இப்படத்தை கவுதம் மேனன் தயாரித்துள்ளார். எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் இப்படத்தை வெளியிடவுள்ளது. பலமுறை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு, இப்படம் தள்ளிவைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
8 hours ago
சுற்றுச்சூழல்
8 hours ago
தமிழகம்
8 hours ago
சுற்றுலா
8 hours ago
வாழ்வியல்
8 hours ago
வாழ்வியல்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago