தணிக்கையில் யு: செப்.8-ம் தேதி வெளியாகிறது நெருப்புடா

By ஸ்கிரீனன்

தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து, செப்டம்பர் 8-ம் தேதி 'நெருப்புடா' வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

புதுமுக இயக்குநர் அசோக் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'நெருப்புடா'. இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து, தணிக்கைக்கு விண்ணப்பித்தார்கள். தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைக்கவே, சரியான வெளியீட்டு தேதிக்காக படக்குழு காத்திருந்தது.

தற்போது செப்டம்பர் 8-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்ட ட்ரெய்லருக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி, வருண், ராஜேந்திரன், 'ஆடுகளம்' நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்துக்கு ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தினை விக்ரம் பிரபு, இசக்கி துரை மற்றும் அஜய்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

55 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்