ஜே.சதீஷ்குமார் தயாரிப்பில் அடுத்து உருவாகும் 'ஹவ்ரா ப்ரிட்ஜ்' படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 4-ம் தேதி முதல் கொல்கத்தாவில் தொடங்கவுள்ளது.
சமீபத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'தரமணி' படத்தைத் தொடர்ந்து 'ஹவ்ரா ப்ரிட்ஜ்' என்று பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தை தயாரித்து வருகிறார் ஜே. சதீஷ்குமார். லோஹித் இயக்கி வரும் இப்படத்தில் பிரியங்கா உபேந்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதற்கு வசனம் மற்றும் பாடல்களை எழுதியுள்ளார் கபிலன் வைரமுத்து. ப்ரியங்கா உபேந்திராவின் மகளாக ஐஸ்வர்யா நடித்து வருகிறார். முழுக்க கொல்கத்தா நகரை மையப்படுத்தி படமாக்கி வருகிறது படக்குழு.
இப்படம் குறித்து தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் கூறியிருப்பதாவது:
'தரமணி' படத்தை தயாரித்த பெருமையும் அதன் வெற்றியும் என்னை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வணிக ரீதியான வெற்றி மட்டுமில்லாமல் எனது தயாரிப்பு நிறுவனத்திற்கும் பெரும் அடையாளத்தை தந்துள்ளது 'தரமணி'.
'ஹவ்ரா ப்ரிட்ஜ்' எனது அடுத்த தயாரிப்பாகும். உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து பின்னப்பட்டுள்ள திரில்லர் கதை இது. செப்டம்பர் 4-ம் தேதி தொடங்கி ஒரு மாதம் இப்படப்பிடிப்பு நடக்கவுள்ளது. இக்கதையோட்டத்திற்கு கொல்கத்தா நகரம் மிக பொருத்தமான நகராக இருப்பதால் படப்பிடிப்பை அங்கு நடத்தவுள்ளோம். இப்படம் எனது தயாரிப்பு நிறுவனத்திற்கு மேலும் மதிப்பைக் கூட்டும் என நம்புகிறேன்.
மேலும் பல தரமான படங்களைத் தர என் நிறுவனத்தின் சார்பில் முனைப்போடு உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார் ஜே.சதீஷ்குமார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
30 mins ago
இந்தியா
1 hour ago
வணிகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இணைப்பிதழ்கள்
2 hours ago
க்ரைம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
உலகம்
5 hours ago
இந்தியா
6 hours ago
சினிமா
5 hours ago