சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'வேலைக்காரன்' படத்தில், சொந்தக் குரலில் டப்பிங் பேசினார் ஃபகத் பாசில்
'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகவுள்ளார் மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான ஃபகத் பாசில். இதில் படப்பிடிப்பு தளத்தில் வசனங்களை மனப்பாடம் செய்து பேசி நடித்தாலும், டப்பிங் வேறொருவரைப் பேச வைக்கலாம் என முடிவு செய்துள்ளது படக்குழு.
ஆனால், நானே பேசி விடுகிறேன். அதுவே சரியாக இருக்கும் என பேசியுள்ளார் ஃபகத் பாசில். அவருடைய அர்ப்பணிப்பைப் பார்த்து மிகவும் நெகிழ்ச்சியடைந்துள்ளது படக்குழு.
மோகன்.ராஜா இயக்கியுள்ள 'வேலைக்காரன்' படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ரோபோ சங்கர், விஜய் வசந்த், சிநேகா மற்றும் ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். 24ஏஎம் நிறுவனம் தயாரித்துள்ளது.
'வேலைக்காரன்' பணிகளை முடித்துவிட்டு, தற்போது பொன்.ராம் இயக்கிவரும் பெயரிடப்படாத படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
ஓடிடி களம்
25 mins ago
இந்தியா
3 mins ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
58 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
சினிமா
2 hours ago
வலைஞர் பக்கம்
3 hours ago