கிறிஸ்துமஸ் விடுமுறையை மனதில் கொண்டு, 'பிரியாணி' படத்தினை வெளியிடலாமா என்று கணக்கிட்டு கொண்டிருக்கிறது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்.
கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி நடிக்க, வெங்கட்பிரபு இயக்கியிருக்கும் படம் 'பிரியாணி'. இது யுவன் இசையமைத்திருக்கும் 100 வது படம். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
'பிரியாணி' படம் தான் கார்த்திக்கு முதலில் வெளிவருவதாக இருந்தது. ஆனால் படத்தின் பணிகள் முடியாததால், 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்தினை வேகமாக தயார் செய்து தீபாவளிக்கு வெளியிட்டார்கள். படம் படுதோல்வியைச் சந்தித்தது.
'ஆல் இன் ஆல் அழகுராஜா' படம் தீபாவளிக்கும், 'பிரியாணி' படம் பொங்கலுக்கும் வெளியாகும் என்று ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில், பொங்கலுக்கு 'ஜில்லா', 'வீரம்', 'கோச்சடையான்' என பெரிய பட்ஜெட் படங்களோடு போட்டியிட வேண்டாம் என்று முடிவு செய்து, கிறிஸ்துமஸ் விடுமுறையை கணக்கில் கொண்டு வெளியிடலாமா என்ற ஆலோசனையில் இறங்கியிருக்கிறது.
டிசம்பர் 20ம் தேதி வெளியிட்டால், கிறிஸ்துமஸ் விடுமுறை மற்றும் புத்தாண்டு விடுமுறை என தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள் வருவதால், சீக்கிரமாக பிரியாணியை பரிமாறி, கல்லா கட்டலாம் என்ற முடிவில் இருக்கிறது படக்குழு.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
வணிகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
தொழில்நுட்பம்
4 hours ago
சினிமா
5 hours ago
க்ரைம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
இந்தியா
6 hours ago
க்ரைம்
6 hours ago