'மாநகரம்' படக்குழுவினருக்கு இயக்குநர் ஷங்கர் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள்.
புதுமுக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'மாநகரம்'. ரியாஸ் இசையமைக்க, செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். மார்ச் 10-ம் தேதி இப்படம் வெளியானது.
விமர்சன ரீதியாக இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. குறைவான திரையரங்குகளில் வெளியானாலும், முதல் நாள் கூட்டமும் குறைவாக இருந்தது. பலரும் இப்படத்தை பாராட்டவே, 2வது வாரத்துக்குள் திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டு, காட்சிகளும் கூட்டப்பட்டன. மேலும், கடந்த வாரம் வெளியான படங்களை விட 'மாநகரம்' படத்தின் வசூல் சில இடங்களில் அதிகம் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.
இந்நிலையில் இப்படத்தை இயக்குநர் ஷங்கர் பாராட்டியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ""மாநகரம் - மிகவும் புத்திசாலித்தனமான படைப்பு. இப்படத்தை பார்க்கும்போது ஆரம்பம் முதல் முடிவுவரை சீட்டின் நுனியில் அமர்வீர்கள். இப்படத்தின் இயக்குநர், நடிகர், நடிகைகள் மற்றும் குழுவுக்கு எனது பாராட்டுகள்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இப்படம் குறித்து சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ் சினிமாவின் சிறந்த த்ரில்லர்களில் மாநகரமும் ஒன்று. இயக்குநர் லோகேஷின் சிறந்த உருவாக்கத்துக்கு பாராட்டுகள். படம் முழுவதும் முனீஷ்காந்தின் பங்களிப்பு மிகச் சிறப்பானது" என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
43 mins ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
வாழ்வியல்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago