சி.வி.குமார் தயாரிப்பில் கலையரசன், ஜனனி, ஷிவதா நடிப்பில் உருவாகி வரும் படத்துக்கு 'அதே கண்கள்' என தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
'கபாலி' படத்தைத் தொடர்ந்து கலையரசன் நாயகனாக நடித்த படத்தை சி.வி.குமார் தயாரித்து வந்தார். ஜனனி ஐயர், ஷிவதா நாயர், பால சரவணன் ஆகியோர் நடித்து வந்த இப்படத்தை ரோஹின் வெங்கடேசன் இயக்கி வருகிறார்.
ஜிப்ரான் இசையமைத்து வரும் இப்படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. இப்படத்துக்கு பெயரிடப்படாமலே படக்குழு படப்பணிகளை கவனித்து வந்தது.
தற்போது 'அதே கண்கள்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். ரவிசந்திரன், காஞ்சா நடிப்பில் திருலோகச்சந்தர் இயக்கி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'அதே கண்கள்'. அப்படத்தின் தயாரிப்பாளரிடம் அனுமதி வாங்கி இப்படத்துக்கு தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
'மாயவன்' படத்தினை விளம்பரப்படுத்து பணிகளைத் தொடர்ந்து 'அதே கண்கள்' படத்தை விளம்பரப்படுத்த திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
13 mins ago
வணிகம்
3 mins ago
இந்தியா
13 mins ago
சுற்றுலா
5 hours ago
தமிழகம்
24 mins ago
இந்தியா
31 mins ago
வணிகம்
34 mins ago
இந்தியா
47 mins ago
இந்தியா
54 mins ago
தமிழகம்
1 hour ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
இணைப்பிதழ்கள்
6 hours ago