தணிக்கையில் யு சான்றிதழ்: ஏப்.14-ல் வெளியாகிறது பவர் பாண்டி

By ஸ்கிரீனன்

தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து, ஏப்ரல் 14-ம் தேதி 'பவர் பாண்டி' வெளியாகும் என படக்குழு அறிவிப்பு.

தனுஷ் இயக்குநராக அறிமுகமாவுள்ள படம் 'பவர் பாண்டி'. ராஜ்கிரண், ரேவதி, தனுஷ், மடோனா செபாஸ்டியன், பிரசன்னா, சாயா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

தனுஷ் தயாரித்துள்ள இப்படத்தை கே புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தன.

அனைத்துப் பணிகளும் முடிவுபெறவே, தணிக்கைக்கு விண்ணப்பித்தார்கள். 'பவர் பாண்டி' படத்தைப் பார்த்து 'யு' சான்றிதழ் வழங்கவே மகிழ்ச்சியடைந்தது படக்குழு. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

இந்தியா

3 mins ago

வாழ்வியல்

22 mins ago

சுற்றுலா

25 mins ago

வணிகம்

6 hours ago

இந்தியா

50 mins ago

சினிமா

45 mins ago

தமிழகம்

53 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

மேலும்