நண்பர்களோடு அரசியல் குறித்து பேசியதை மறுக்கவில்லை: ரஜினி

By ஸ்கிரீனன்

என்னை சந்திக்கும் நண்பர்களோடு அரசியல் குறித்து பேசியதை மறுக்கவில்லை என்று ரஜினி கூறியுள்ளார்.

'காலா' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார் ரஜினிகாந்த். விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக மும்பை செல்வேன் என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று 'காலா' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகாக மும்பைக்கு சென்றார் ரஜினிகாந்த். அப்போது சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது, "அடுத்த கட்டமாக செப்டம்பர் அல்லது அக்டோபரில் ரசிகர்களை மீண்டும் சந்திப்பேன். அரசியலுக்கு வருவது என முடிவெடுத்தவுடன், நீங்கள் எழுப்பும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிப்பேன். அரசியலுக்கு வருவது பற்றி முடிவெடுக்கும் போது அறிவிப்பேன். என்னை சந்திக்கும் நண்பர்களோடு அரசியல் குறித்து பேசியதை மறுக்கவில்லை" என்று பேசினார் ரஜினி.

'காலா' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு, மும்பையிலிருந்து நேரடியாக அமெரிக்காவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக செல்ல திட்டமிட்டுள்ளார் ரஜினி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தொழில்நுட்பம்

9 hours ago

சினிமா

10 hours ago

க்ரைம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்