விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படத்தின் பணிகள் இம்மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது.
'சிங்கம் 3' படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் சூர்யா.
விஜய் சேதுபதியை நாயகனாக வைத்து இயக்கவிருந்த 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தைத் தான் சூர்யாவை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கிறார் என்றும் நயன்தாரா நாயகி என தகவல்கள் வெளியானது.
இது குறித்து படக்குழுவினரிடம் கேட்ட போது, "'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தை சூர்யாவை வைத்து இயக்கவில்லை விக்னேஷ் சிவன். அக்கதை முழுக்க காதலை பின்னணியாக கொண்டது.
ஆனால், சூர்யாவின் படத்தை ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் கதையை இயக்கவிருக்கிறார். இம்மாத இறுதியில் படப்பூஜையோடு பணிகள் துவங்கப்படும். அதே போல, நயன்தாரா நாயகி என்று தகவல் வெளியாகியிருக்கிறது. கண்டிப்பாக அவர் நாயகி இல்லை." என்று தெரிவித்தார்கள்.
அனிருத் இசையமைக்கவிருக்கும் இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மற்றும் 2டி நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
இந்தியா
2 hours ago
வணிகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
இணைப்பிதழ்கள்
4 hours ago
க்ரைம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
உலகம்
6 hours ago
இந்தியா
7 hours ago
சினிமா
6 hours ago