'இரண்டாம் உலகம்' படத்தின் பின்னணி இசைக்காக செல்வராகவனும் அனிருத்தும் ஹங்கேரி நாட்டிற்கு சென்றிருக்கிறார்கள்.
மற்ற படங்களின் பணிகள் இருப்பதால், செல்வராகவன் இயக்கியுள்ள 'இரண்டாம் உலகம்' படத்தின் பின்னணி இசையிலிருந்து ஹாரிஸ் ஜெயராஜ் விலகினார். தற்போது அப்படத்திற்கு அனிருத் பின்னணி இசைக் கோர்ப்பு செய்து வருகிறார். அப்படத்தின் பின்னணி இசைக்காக ஹங்கேரி நாட்டின் புகழ்பெற்ற சிம்பொனி குழுவை பயன்படுத்த இருக்கிறார்கள்.
இதற்காக இயக்குநர் செல்வராகவன் மற்றும் அனிருத் இருவரும், ஹங்கேரி நாட்டின் தலைநகரான புத்தாபெஸ்ட் என்னும் இடத்திற்கு சென்றிருக்கிறார்கள்.
இப்படத்தின் பின்னணி இசைப் பணிகள் முடிந்து, சென்சார் முடிந்தவுடனேயே படம் எப்போது வெளியாகும் என்று அறிவிக்கவிருக்கிறது படக்குழு. படம் தீபாவளிக்கு வெளிவரும் என்று பேச்சு நிலவிவருகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
41 mins ago
ஓடிடி களம்
53 mins ago
இந்தியா
31 mins ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
3 hours ago
வலைஞர் பக்கம்
3 hours ago