வீட்டை காலி செய்யாமல் சொந்தம் கொண்டாடுகிறார்: மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்

By செய்திப்பிரிவு

வீட்டை காலி செய்யாமல் அதை சொந்தம் கொண்டாடுவதாக மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

நடிகர் விஜயகுமாருக்கு சொந்த மான வீடு மதுரவாயல் அருகே ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகரில் உள்ளது. இந்த வீட்டின் ஒருபகுதியை திரைப்படங்கள் மற்றும் டி.வி தொடர்கள் எடுக்க வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவரது மகள் வனிதா, சினிமா படப்பிடிப்பு நடத்துவதற்காக இந்த வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகும் அவர் வீட்டை காலி செய்யவில்லை. மாறாக அது தன்னுடைய வீடு என்று உரிமை கொண்டாடியதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து வனிதா விடமிருந்து வீட்டை மீட்டு தரும்படி மதுரவாயல் காவல் நிலையத்தில் விஜயகுமார் புகார் தெரிவித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீஸார், வனிதாவை விசாரணைக்காக நேரில் வரும்படி அழைத்திருந்தனர். அதன்படி வனிதா நேற்று காலை மதுரவாயல் காவல் நிலையம் சென்றார். புகார் குறித்து இரு தரப்பினரிடமும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில் இது தொடர்பாக செய்தி சேகரிக்க மதுரவாயல் வீட்டுக்கு சென்ற செய்தியாளர்களிடம் வனிதா வாய்த் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்தும் மதுரவாயல் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

உலகம்

35 mins ago

சினிமா

47 mins ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

கல்வி

2 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

2 hours ago

மேலும்