மீண்டும் அமெரிக்கா திரும்பிய துருவ் விக்ரம்

By செய்திப்பிரிவு

‘வர்மா’ படத்தின் டப்பிங் முடிந்துவிட்டதால், மறுபடியும் அமெரிக்காவுக்கே திரும்பிவிட்டார் துருவ் விக்ரம் எனத் தகவல் கிடைத்துள்ளது.

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் தெலுங்குப் படம் ‘அர்ஜுன் ரெட்டி’. கடந்த வருடம் வெளியான இந்தப் படத்தில், விஜய் தேவரகொண்டா - ஷாலினி பாண்டே ஜோடியாக நடித்தனர். 10 மடங்குக்கு மேல் லாபம் சம்பாதித்துக் கொடுத்தது இந்தப் படம்.

‘அர்ஜுன் ரெட்டி’ படத்தைத் தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார் இயக்குநர் பாலா. விக்ரமின் மகன் துருவ் விக்ரம், இந்தப் படத்தின் மூலம் ஹீரோவாக சினிமாவில் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக மேகா என்ற மாடல் நடிக்க, முக்கியக் கதாபாத்திரத்தில் ஈஸ்வரி ராவ் நடித்துள்ளார்.

துருவ் விக்ரமுக்கு, தற்போது 22 வயதுதான் ஆகிறது. அமெரிக்காவில் ஃபிலிம் மேக்கிங் கோர்ஸ் படித்துவரும் துருவ், விக்ரம் கேட்டுக் கொண்டதற்காகத்தான் ‘வர்மா’ படத்தில் நடிக்க ஓகே சொன்னார். அத்துடன், அவர் இன்னொரு வேண்டுகோளையும் தந்தையிடம் வைத்திருக்கிறார். இப்போதைக்கு ‘வர்மா’ படத்தில் மட்டுமே நடிப்பேன், படிப்பு முடிந்த பிறகுதான் வேறு படங்களில் நடிப்பேன் என்பதுதான் அது. விக்ரமும் அதற்கு ஒப்புக் கொண்டுள்ளார்.

தற்போது ‘வர்மா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து, தன்னுடைய போர்ஷனுக்கு டப்பிங்கும் பேசிவிட்டார் துருவ். எனவே, படிப்பைத் தொடர மறுபடியும் அமெரிக்கா சென்றுவிட்டார். ‘வர்மா’ ரிலீஸின்போது இங்குவந்து புரமோஷன் பணிகளில் ஈடுபடுவார் எனத் தகவல் கிடைத்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

30 mins ago

ஜோதிடம்

33 mins ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்