‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் இசை வெளியீடு, முகநூலில் நேரலையாக ஒளிபரப்பாக இருக்கிறது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘செக்கச்சிவந்த வானம்’. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
அரவிந்த் சாமி, ஜோதிகா, சிம்பு, அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் சேதுபதி, அதிதி ராவ், டயானா இரப்பா, பிரகாஷ் ராஜ் என நிறைய நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இம்மாதம் 28-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.
எனவே, வருகிற புதன்கிழமை (செப்டம்பர் 5) இந்தப் படத்தின் இசை வெளியீடு நடைபெற இருக்கிறது. இந்தப் படத்தில் உள்ள பாடல்களை, நேரடியாக இசைத்துப் பாடுகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த நிகழ்ச்சி, ஏ.ஆர்.ரஹ்மானின் முகநூல் பக்கத்தில் நேரலையாகவும் ஒளிபரப்பாக இருக்கிறது.
இந்தப் படத்தில் இடம்பெறும் அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார். மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் கடந்த வருடம் வெளியான ‘காற்று வெளியிடை’ படத்துக்கு, சிறந்த பின்னணி இசைக்கான விருது மற்றும் ‘வான் வருவான்’ பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருது என இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தன. எனவே, ‘செக்கச்சிவந்த வானம்’ பாடல்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
சினிமா
5 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago
உலகம்
6 hours ago
வாழ்வியல்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
சினிமா
9 hours ago
க்ரைம்
9 hours ago
தமிழகம்
9 hours ago