என் கையெழுத்து இனி தமிழில் மட்டுமே; ஜீ.வி.பிரகாஷ் புது முடிவு: நெட்டிசன்கள் பாராட்டு

By செய்திப்பிரிவு

என் கையெழுத்துகள் தமிழில் மட்டும் என்று உளமாற உறுதி ஏற்பதாக நடிகரும், இசையமைப்பாளருமான ஜீ.வி.பிரகாஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டம், அனிதா தற்கொலை, ஸ்டெர்லைட் போராட்டம், விவசாயிகள் போராட்டம், நீட் எதிர்ப்பு என பல்வேறு பிரச்சினைகளின் போது களத்தில் இறங்கித் துணிவுடன் குரல் கொடுத்தவர் ஜீ.வி.பிரகாஷ்.

ஒக்கி புயலின்போது காணாமல் போன மீனவக் குடும்பங்களுக்கும், தமிழகத்தில் நலிவடைந்த நிலையில் உள்ள விவசாயிகளின் குடும்பத்துக்கும் உதவி செய்த ஜீ.வி.பிரகாஷ் பல்வேறு வகையான சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்.

இந்நிலையில், ஜீ.வி.பிரகாஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''உலகம் வென்ற தமிழ் , நமை கர்வம் கொள்ள வைத்த தமிழ் , எனை ஆட்கொண்ட தமிழ்... இனி புதிய விதி செய்யும் என் “கையெழுத்துகள்” தமிழில் மட்டும் என்று உளமாற உறுதி ஏற்கிறேன் ... #தமிழ்விதியெனசெய்'' என்று தெரிவித்துள்ளார்.

ஜீ.வி.பிரகாஷின் இந்த முடிவை வரவேற்று நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

உலகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்