சமந்தாவுக்காகத்தான் ரீமேக்கை இயக்க ஒப்புக் கொண்டேன் என இயக்குநர் பவன் குமார் தெரிவித்துள்ளார்.
கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான படம் ‘யு டர்ன்’. ‘லூசியா’ படத்தை இயக்கிய பவன் குமார் இந்தப் படத்தை இயக்கினார். ஹீரோயினை மையப்படுத்திய இந்தப் படத்தில், பிரதான வேடத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்தார். இந்தப் படம் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
இரண்டு மொழிகளிலுமே பவன் குமார் இயக்க, சமந்தா ஹீரோயினாக நடித்துள்ளார். அவருடன் இணைந்து ஆதி பின்னிசெட்டி, ராகுல் ரவீந்திரன், பூமிகா ஆகியோர் நடித்துள்ளனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருகிற 13-ம் தேதி இரண்டு மொழிகளிலும் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.
இந்நிலையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய பவன் குமார், “கன்னடத்தில் வெளியான ‘யு டர்ன்’ படத்தைவிட இது மேம்பட்ட வடிவமாக இருக்கும். தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படமும் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.
தமிழ், தெலுங்குக்கு ஏற்ப திரைக்கதையில் நிறைய மாற்றங்கள் செய்திருக்கிறோம். கடைசி 30 நிமிடங்கள் மிகவும் த்ரில்லாக இருக்கும். கன்னடத்தில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸானபோதே சமந்தா என்னிடம் பேசினார். அவருக்காகத்தான் இந்த ரீமேக்கை இயக்க ஒப்புக் கொண்டேன்.
சமந்தா, ராகுல் ரவீந்திரன் இருவரிடம் இருந்தும் கொஞ்சம் கொஞ்சம் தமிழ் கற்றுக் கொண்டேன். தமிழ் ரசிகர்கள் பல நல்ல சினிமாக்களைப் பார்த்தவர்கள். இந்தப் படத்தையும் அவர்கள் அங்கீகரிப்பார்கள் என நம்புகிறேன்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
சினிமா
5 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago
உலகம்
6 hours ago
வாழ்வியல்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
சினிமா
9 hours ago
க்ரைம்
9 hours ago
தமிழகம்
9 hours ago