கேரளாவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.1 கோடி நிதியுதவி

By செய்திப்பிரிவு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு, ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

சமீபத்தில் பெய்த மழையால், கேரளா வெள்ளக் காடானது. 13 மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், இந்தப் பாதிப்பில் இருந்து கேரளா மீண்டெழ பல்லாண்டுகள் ஆகும் எனத் தெரிகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 9 லட்சம் பேர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

கடவுளின் தேசத்தைக் காப்பாற்ற, பலரும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர். குறிப்பாக, சினிமாத்துறையில் உள்ள பலர் நிதியுதவி செய்து வருகின்றனர். சிலர், நேரடியாகக் களத்தில் இறங்கி மக்களுக்கான அடிப்படை உதவிகளைச் செய்கின்றனர்.

இந்நிலையில், கேரளாவுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்திய ஏ.ஆர்.ரஹ்மான், அந்த நிகழ்ச்சியின் இறுதி நாளான நேற்று இதை அறிவித்துள்ளார். கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு இது அளிக்கப்பட இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

உலகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

8 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்