கேரளாவுக்கு 80களின் நடிகர்கள் ரூ.40 லட்சம் நிதியுதவி

By செய்திப்பிரிவு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு, 80களின் நடிகர்கள் கூட்டணி 40 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது.

கேரளாவில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக மிகப்பெரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அங்குள்ள 14 மாவட்டங்களில், 12 மாவட்டங்கள் வெள்ளப் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 476 பேர் இறந்துள்ளனர்.

9 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இப்படிக் கனமழையால் சிக்கி சின்னாபின்னமான கேரளாவுக்கு, பல்வேறு இடங்களில் இருந்தும் உதவிகள் வந்த வண்ணம் உள்ளன.

குறிப்பாக, திரைத்துறையைச் சார்ந்த பலர் உதவிகள் செய்து வருகின்றனர். கேரளாவைச் சேர்ந்த சில நடிகர் - நடிகைகள் நேரடியாகக் களத்தில் இறங்கி உதவி செய்தனர். தென்னிந்திய சினிமாவைச் சேர்ந்த பலர் முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில், 80களில் ஹீரோ, ஹீரோயின்களாக நடித்த பலர் ஒன்றுசேர்ந்து 40 லட்ச ரூபாயை நிதியுதவியாக அளித்துள்ளனர். இந்த நிதியை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் நடிகைகள் சுஹாசினி, குஷ்பூ, லிசி ஆகிய மூவரும் வழங்கினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

உலகம்

10 hours ago

வாழ்வியல்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்