விஜய்யின் ‘சர்கார்’ ஷூட்டிங் நிறைவு

By செய்திப்பிரிவு

விஜய் நடித்துவந்து ‘சர்கார்’ படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்றுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவந்த படம் ‘சர்கார்’. விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகிவரும் இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, அனைத்துப் பாடல்களையும் விவேக் எழுதியுள்ளார்.

விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ‘பைரவா’ படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இருவரும் இணைந்துள்ளனர். மேலும், வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு, ராதாரவி, பழ.கருப்பையா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சென்னை, கொல்கத்தா, லாஸ் வேகாஸ் உள்ளிட்ட பல இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்நிலையில், நேற்றுடன் (செப்டம்பர் 2) படப்பிடிப்பு நிறைவு பெற்றதாகப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். கடைசி நாள் ஷூட்டிங்கில் வரலட்சுமி சரத்குமார் கலந்து கொண்டார்.

அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ‘சர்கார்’ பாடல்கள் ரிலீஸாக இருக்கின்றன. வருகிற தீபாவளிக்கு உலகம் முழுவதும் இந்தப் படம் ரிலீஸாகிறது. ஒரு வருடம் கழித்து வெளியாகும் விஜய் படம் என்பதால், அவருடைய ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

கல்வி

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

உலகம்

10 hours ago

வாழ்வியல்

11 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்