கதை சொல்லும் திரில்லர்

By செய்திப்பிரிவு

மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த், அதுல்யா ரவி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவர உள்ள படம் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’. இப்பட அனுபவம் குறித்து, சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் விக்ராந்த் கூறியதாவது:

முதலில் இப்படத்தில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. ‘இது ஒரு மல்ட்டி ஸ்டார் படம்’ என்று இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா என்னிடம் கூறியபோது, என் முந்தைய படங்களும் அதே வகையில் இருந்ததால் இதை தவிர்க்க நினைத்தேன். மேலும், ‘பக்ரீத்’ போன்ற திரைப்படங்கள் என்னை ஒரு சோலோ ஹீரோவாக நிறுவும் நேரத்தில், இந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ள தயங்கினேன். படத்தின் ஸ்கிரிப்ட்டையாவது கேளுங்கள் என்றார் ராம்பிரகாஷ் ராயப்பா. சரி, சும்மா கேட்கலாம் என்று ஓ.கே. சொன்னேன். அவர் கதை சொன்ன விதமும், என் கதாபாத்திர வடிவமைப்பும் வெகுவாக ஈர்த்ததால் ஒப்புக்கொண்டேன்.

என் கதாபாத்திரம் எமோஷன், சஸ்பென்ஸ், ஆக்சன் என அனைத்தையும் கொண்டிருக்கும். வழக்கமான திரில்லர் படங்கள், ‘அடுத்து என்ன?’ என ஊகிக்க வைத்துக்கொண்டே இருக்கும், ஆனால், ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ படமோ நேரடியான கதை சொல்லலைக் கொண்டிருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

சினிமா

53 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

55 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

39 mins ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்