சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குகிறார் கே.வி.ஆனந்த்: அதிகாரபூர்வ அறிவிப்பு

By அபராசிதன்

சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கப்போவதாக கே.வி.ஆனந்த் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

சூர்யா தற்போது ‘என்.ஜி.கே.’ படத்தில் நடித்து வருகிறார். செல்வராகவன் இயக்கும் இந்தப் படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் சேர்ந்து தயாரிக்கும் இந்தப் படத்தை, ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிடுகிறது .

இந்தப் படத்தைத் தொடர்ந்து சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குவது கே.வி.ஆனந்த் அல்லது ‘இறுதிச்சுற்று ‘ சுதா கொங்கரா என இரண்டு பெயர்கள் அடிபட்டன. இந்நிலையில், அடுத்த படத்தை இயக்குவது கே.வி.ஆனந்த் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .

கே.வி.ஆனந்தே ட்விட்டரில் இதை அறிவித்துள்ளார். இந்தப் படத்துக்கு கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுத, கலை இயக்குநராக கிரண் பணியாற்றுகிறார். இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

44 mins ago

ஜோதிடம்

51 mins ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

கல்வி

9 hours ago

மேலும்