ஷூட்டிங்கில் அஜித்தைப் பார்க்க ஆவலோட காத்திருக்கேன்- ரோபோ சங்கர்

By அபராசிதன்

அஜித்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார்.

அஜித் – சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் ‘விசுவாசம்’. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார். தம்பி ராமையா, யோகிபாபு ஆகியோர் காமெடியன்களாக நடிக்க, ரோபோ சங்கரும் தற்போது இந்தக் கூட்டணியில் இணைந்துள்ளார்.

படம் முழுக்க அஜித் கூடவே வரும் கேரக்டரில் நடிக்கிறார் ரோபோ சங்கர். இதற்காக கிட்டத்தட்ட 50 நாட்கள் வரை கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

''இதுவரைக்கும் நான் அஜித்தை நேரில் பார்த்தது இல்லை. முதல்நாள் ஷூட்டிங்கில்தான் பார்க்கப் போறேன். பயங்கர எதிர்பார்ப்போடவும், ஆவலுடன் அவரைப் பார்க்கக் காத்திருக்கேன். இத்தனை நாட்கள் கஷ்டப்பட்டதற்குப் பலன் கிடைத்திருக்கிறது. 'மாரி'க்குப் பிறகு அமைந்த மிகப்பெரிய படம் இது. கண்டிப்பா எனக்கு நல்ல பெயர் கிடைக்கும்'' என்கிறார் ரோபோ சங்கர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

மேலும்