விஜய் படம் முடித்ததும் ஷாருக்கான் படம்: இயக்குநர் அட்லீ திட்டம்

By ஸ்கிரீனன்

விஜய் படத்தை இயக்கி முடித்ததும், ஷாருக்கான் படத்தை இயக்க அட்லீ முடிவு செய்துள்ளார்

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் அட்லீ. இதன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், யோகி பாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தைத் தொடர்ந்து 'மெர்சல்' படத்தின் இந்தி ரீமேக்கை அட்லீ இயக்கவுள்ளதாகவும், அதில் ஷாருக்கான் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இச்செய்தி தொடர்பாக அட்லீயும்  எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 9) சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதைப் பார்ப்பதற்காக கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் சென்னை வந்தார். மேலும், அப்போட்டியின் போது ஷாருக்கானுக்கு அருகில் உட்கார்ந்து மேட்ச்சை இயக்குநர் அட்லீ பார்த்தார்.  இதனால் இருவரும் இணைந்து படம் பண்ணும் தகவல் உறுதியானது.

ஆனால், கிரிக்கெட் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாக இயக்குநர் அட்லீயின் அலுவலகத்துக்கு சென்றுள்ளார் ஷாருக்கான். அப்போது இருவரும் இணையும் படம் குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கிறது.

இந்தச் சந்திப்பு குறித்து இயக்குநர் அட்லீ தரப்பில் விசாரித்த போது, "தற்போது இயக்கி வரும் விஜய் படம் முடிந்தவுடன், ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் அட்லீ. இக்கூட்டணி இணைவது முடிவாகிவிட்டது. இந்தியில் உருவாகும் இப்படம் 'மெர்சல்' ரீமேக் அல்ல. வேறொரு புதிய கதையைத் தான் ஷாருக்கானிடம் கூறினார். அவருக்குப் பிடித்துவிடவே, நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்" என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஆன்மிகம்

8 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்