சத்தமின்றி தொடங்கப்பட்டுள்ள ஜிகர்தண்டா தெலுங்கு ரீமேக்

By செய்திப்பிரிவு

'ஜிகர்தண்டா' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அதர்வா, மிருணாளினி, வருண் தேஜ் ஆகியோர் நடிக்க படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஜிகர்தண்டா'. 2014-ம் ஆண்டு வெளியான இப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

'ஜிகர்தண்டா' படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இதன் ரீமேக் உரிமைக்கு கடும் போட்டியிட்டு கைப்பற்றினார்கள். இதன் தெலுங்கு ரீமேக்கின் படப்பிடிப்பு சத்தமின்றி தொடங்கப்பட்டுள்ளது.

ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சித்தார்த் கதாபாத்திரத்தில் அதர்வா, லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில் மிருணாளினி, பாபி சிம்ஹா கதாபாத்திரத்தில் வருண் தேஜ் நடித்து வருகிறார்கள். தெலுங்கில் அதர்வா நாயகனாக அறிமுகமாகும் படமாக, இப்படம் அமைந்துள்ளது.

இந்த ரீமேக்கிற்கு 'வால்மீகி' என்று தலைப்பிட்டுள்ளனர். முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்ட படக்குழு, இரண்டாம்கட்ட படப்பிடிப்புக்காக தயாராகி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

32 mins ago

விளையாட்டு

23 mins ago

தமிழகம்

47 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்