'புதுப்பேட்டை 2' படத்துக்கான திரைக்கதை பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக கல்லூரி விழா ஒன்றில் தனுஷ் தெரிவித்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சோனியா அகர்வால், சிநேகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'புதுப்பேட்டை'. 2006-ம் ஆண்டு வெளியான இப்படம் தற்போது வரை அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் செல்வராகவனிடம் 'புதுப்பேட்டை 2' மற்றும் 'ஆயிரத்தில் ஒருவன் 2' குறித்து அவ்வப்போது ரசிகர்கள் கேள்வி எழுப்புவார்கள். அதற்கு 'விரைவில் நடக்கும்' என்றே பதிலளித்து வந்தார்.
இந்நிலையில், சென்னையில் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்டார் தனுஷ். அப்போது 'புதுப்பேட்டை' 2-ம் பாகம் குறித்து கேள்வி எழுப்பியதற்கு தனுஷ் கூறியிருப்பதாவது:
கண்டிப்பாக 'புதுப்பேட்டை 2' எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. 'புதுப்பேட்டை' படத்துக்கென்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அதனால் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும்போது அது முதல் பாகத்துக்கு நியாயமாக இருக்கவேண்டும். அதே போல கொக்கி குமார் என்ற கதாபாத்திரத்துக்கும் நியாயம் செய்ய வேண்டும். அது எளிதான வேலை அல்ல. அதற்கான திரைக்கதை பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன
இவ்வாறு தனுஷ் தெரிவித்துள்ளார்.
தனுஷ் இந்த பதில், 'புதுப்பேட்டை' படத்துக்கான ரசிகர்கள் மத்தியில் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
இந்தியா
54 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago