மோகன் ராஜா இயக்கத்தில் விஜய்

By ஸ்கிரீனன்

'வேலாயுதம்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் விஜய் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் மோகன் ராஜா என்று தகவல் வெளியாகியுள்ளது.

மோகன் ராஜா இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஜெனிலியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'வேலாயுதம்'. ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் வசூல் ரீதியில் நல்ல வரவேற்புப் பெற்றது.

தற்போது மீண்டும் விஜய் நடிக்கும் படத்தை இயக்க மோகன் ராஜாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட போது மோகன் ராஜா "'வேலாயுதம்' படம் விஜய் சாருடன் பண்ணினேன். மறுபடியும் படம் பண்ணுவதற்கு பேச்சுவார்த்தை நடந்துட்டு இருக்கு. " என்று தெரிவித்துள்ளார்.

'வேலைக்காரன்' படத்தைத் தொடர்ந்து 'தனி ஒருவன் 2' படம் பண்ணுவதற்கு ஆயுத்தமாகி வந்தார் மோகன் ராஜா. இது ஜெயம் ரவியின் 25-வது படமாக உருவாகவுள்ளது. தற்போது விஜய்யிடம் பேசிவருவதாக மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.

இதனால், விஜய் படத்தை இயக்கி முடித்துவிட்டு, ஜெயம் ரவி படத்தை இயக்குவார் எனத் தெரிகிறது. இனிவரும் நாட்களில் நடைபெறும் பேச்சுவார்த்தையை வைத்து எது முதலில் என்பது முடிவாகும்.

அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய். இப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தின் இயக்குநர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. இதற்கான கதைக் கேட்பதிலும் தற்போது தீவிரமாகி இருக்கிறார் விஜய்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தொழில்நுட்பம்

5 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

க்ரைம்

8 hours ago

மேலும்