மார்ச் 4 முதல் விஜய் சந்தர் - விஜய் சேதுபதி படப்பிடிப்பு தொடக்கம்

By ஸ்கிரீனன்

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு மார்ச் 4-ம் தேதி முதல் ஹைதரபாத்தில் தொடங்கவுள்ளது.

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வந்த 'மாமனிதன்' படப்பிடிப்பு முடிவுற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி எந்த இயக்குநரின் படத்துக்கு தேதிகள் ஒதுக்கவுள்ளார் என்ற கேள்வி எழுந்தது.

இதற்கு பதிலளுக்கும் விதமாக விஜய் சந்தர் இயக்கவுள்ள படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய் சேதுபதி. இதன் படப்பிடிப்பு மார்ச் 4-ம் தேதி முதல் ஹைதராபாத்தில் தொடங்குகிறது.

ராஷிகண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் நாயகிகளாக நடிக்கவுள்ளனர். சூரி, நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மாரிமுத்து, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளார். விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, விவேக் - மெர்வின் இசையமைப்பாளர்களாக பணிபுரியவுள்ளனர்.

விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்த வெளியீடாக 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் மார்ச் 29-ம் தேதி வெளிவரவுள்ளது. தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள இப்படத்தில் இயக்குநர் மிஷ்கின், சமந்தா, ஃபகத் பாசில், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஓடிடி களம்

6 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்