'மாநகரம்' இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மார்ச் 6-ம் தேதி வெளியாகவுள்ளது.
'தேவ்' படப்பிடிப்பு முடிந்தவுடனே, 'மாநகரம்' இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான படத்தில் நடிக்கத் தொடங்கினார் கார்த்தி. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்து வருகிறது.
ஒரே இரவில் நடக்கும் கதை என்பதால், இப்படத்தில் நாயகிகளே கிடையாது. மேலும், ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டு களமிறங்கியது படக்குழு. இதன்படி, இறுதிகட்டப் படப்பிடிப்பை எட்டியுள்ளனர்.
கார்த்தி நடிப்பில் வெளியான படங்களில், குறைந்த நாட்களில் உருவான படம் என்ற பெயரை இப்படம் எடுக்கும் என தெரிகிறது. மேலும், இறுதிகட்டப் படப்பிடிப்பை எட்டியுள்ளதால் இப்படத்தின் பெயருடன் கூட ஃபர்ஸ்ட் லுக்கை மார்ச் 6-ம் தேதி வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் படத்தை முடித்துவிட்டு, 'ரெமோ' இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் படத்திலும், ஜீத்து ஜோசப் இயக்கும் படத்திலும் மாறி மாறி நடிக்க முடிவு செய்துள்ளார் கார்த்தி.
முக்கிய செய்திகள்
உலகம்
10 mins ago
விளையாட்டு
17 mins ago
ஜோதிடம்
46 mins ago
தமிழகம்
36 mins ago
விளையாட்டு
55 mins ago
சினிமா
56 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
தமிழகம்
1 hour ago