விஜய் தொலைக்காட்சியில் வெகுளி பெண்ணாக வந்து அனைவரது அன்பையும் பெற்று வரும் ஜானு நடிப்பில் ஒளிபரப்பாகும் தொடர் ‘அரண்மனைக் கிளி’. இந்த தொடர் 100 அத்தியாயங்களை கடந்துள்ளது. சுவாரஸ்ய திருப்பங்களோடு நகர்ந்துவரும் இத்தொடர், 100 அத்தியாயங்களை கடந்துள்ளதால் தொடர் குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
தொடரின் நாயகியான ஜானு, சூழ்நிலை காரணமாக பணக்கார வீட்டுப் பையனான அர்ஜுனை திருமணம் செய்துகொள்ள நேரிடுகிறது. அர்ஜுன் ஒரு மாற்றுத்திறனாளி. அவர் மீது மிகுந்த அன்பு செலுத்துகிறார் ஜானு. ஆனாலும், ஜானுவைக் கண்டாலே அர்ஜுனுக்கு பிடிக்காது.
இப்படி வெறுப்போடு இருந்துவந்த அர்ஜுன் கடந்த சில அத்தியாயங்களாக ஜானு மீது அன்பு செலுத்த தொடங்கியிருந்தார். கதையில் இப்போதுதான் ஜானுவின் வெகுளியான மனதை அர்ஜுன் புரிந்துகொண்டிருக்கிறார் என்று பார்வையாளர்கள் நினைக்கத் தொடங்கினர்.
இதற்கிடையில், ஜானுவும் அர்ஜுனின் நம்பிக்கையையும், பாசத்தையும் பெறுவதற்காக எல்லாவிதமான முயற்சிகளையும் எடுத்து வந்தார். இந்த சூழலில், தற்போது ஜானுவின் எதிர்காலத்தை கருதி விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திடுகிறார் அர்ஜுன்.
இந்த தருணத்தை சாதுர்யமாக கையாள்கிறார் ஜானு. அரண்மனையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மாமியார் மீனாட்சி உட்பட வீட்டில் உள்ள அனைவரது மனதிலும் எப்படி இடம் பிடிக்கிறார் என்பதை நோக்கி இனி வரும் அத்தியாயங்கள் நகர உள்ளன. கணவர் அர்ஜுனின் அன்பை அவர் எப்படி பற்றுகிறார் என்பதும் சுவாரஸ்யமான பின்னணியோடு நகரத் தொடங்கும்.
அர்ஜூனாக நடிகர் தர்ஷன் நடிக்கிறார். ஜானுவாக நடிகை மோனிஷா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரமான மீனாட்சி ரோலில் நடிகை பிரகதியும், வில்லியாக நீலிமாவும் வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
24 mins ago
இந்தியா
45 mins ago
இந்தியா
33 mins ago
தமிழகம்
51 mins ago
இலக்கியம்
7 hours ago
சினிமா
32 mins ago
இலக்கியம்
7 hours ago
இலக்கியம்
7 hours ago
தமிழகம்
1 hour ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
சினிமா
1 hour ago