சிம்ரன் - த்ரிஷா இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பிரவீன் காந்தி இயக்கத்தில் 1999-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘ஜோடி’. பிரசாந்த் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், ஹீரோயினாக சிம்ரன் நடித்தார். சிம்ரனுக்குத் தோழியாக, ஒருசில காட்சிகளில் நடித்தார் த்ரிஷா. அதன்பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை.
18 வருடங்களுக்குப் பிறகு ‘பேட்ட’ படத்தில் இருவரும் ரஜினிக்கு ஜோடியாக நடித்தனர். ஆனால், இருவருக்குமான காம்பினேஷன் காட்சி ஒன்றுகூட இல்லை.
இந்நிலையில், சிம்ரன் - த்ரிஷா இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஜீவா நடிப்பில் உருவாகிவரும் ‘கொரில்லா’ படத்தைத் தயாரித்துள்ள ஆல் இன் பிக்சர்ஸ், இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
ஆக்ஷன் அட்வெஞ்சராக உருவாக இருக்கும் இதன் படப்பிடிப்பு, மார்ச் மாதம் முதல் தொடங்க இருக்கிறது. இதில் நடிக்கும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின்களாக விளங்கிய இரண்டு நடிகைகள் ஒரே படத்தில் இணைந்து நடிப்பதால், இந்தப் படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
5 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago