நான் உள்பட ரஜினி ரசிகர்களுக்கான சமர்ப்பணம் ‘பேட்ட’ படம் எனத் தெரிவித்துள்ளார் மகேஷ் பாபு.
ரஜினி நடிப்பில் நேற்று (ஜனவரி 10) உலகம் முழுவதும் ரிலீஸான படம் ‘பேட்ட’. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. அனிருத் இசையமைக்க, திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ரஜினி ஜோடியாக த்ரிஷா, சிம்ரன் இருவரும் நடிக்க, விஜய் சேதுபதி, நவாஸுதீன் சித்திக், சசிகுமார், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், இயக்குநர் மகேந்திரன், முனிஸ்காந்த், ராமச்சந்திரன், மாளவிகா, நரேன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ரஜினி ரசிகர்களைத் திருப்திப்படுத்த வேண்டும் எனத் திட்டமிட்டு எடுக்கப்பட்ட படம் என்பதால், எல்லா ரஜினி ரசிகர்களுக்கும் இந்தப் படம் பிடித்திருக்கிறது. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜே தீவிர ரஜினி ரசிகர் என்பதால், தன்னுடைய தலைவனை எப்படியெல்லாம் ரசிகன் பார்க்க ஆசைப்படுவானோ, அந்த அளவுக்கு மாஸாக இந்தப் படத்தை எடுத்துள்ளார்.
சாதாரணமானவர்கள் மட்டுமின்றி, ரஜினி ரசிகர்களாக இருக்கக்கூடிய பிரபலங்களும் படத்தைப் பற்றிப் புகழ்ந்து வருகின்றனர். ‘நான் உள்பட ரஜினி ரசிகர்களுக்கான சமர்ப்பணம் ‘பேட்ட’ படம்’ என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் தெலுங்கின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான மகேஷ் பாபு.
“பேட்ட படம், நாள் உள்பட ரஜினி ரசிகர்களுக்கான சமர்ப்பணம். ஒரே ஒரு வார்த்தையில் சொல்வதென்றால்... தலைவா! கார்த்திக் சுப்புராஜ், மிகச்சிறந்த திறமைகள் கொண்ட இயக்குநர்களில் நீங்களும் ஒருவர். எப்போதும் போல் அருமையாக ஒளிப்பதிவு செய்திருக்கிறீர்கள் திருநாவுக்கரசு. ஒட்டுமொத்த குழுவுக்கும் என்னுடைய வாழ்த்துகள். #ரஜினிஃபைடு” எனத் தெரிவித்துள்ளார் மகேஷ் பாபு.
முக்கிய செய்திகள்
வணிகம்
5 hours ago
இந்தியா
16 mins ago
சினிமா
11 mins ago
தமிழகம்
19 mins ago
இந்தியா
40 mins ago
இந்தியா
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
2 hours ago