சூர்யா - ஹரி இணையும் ‘யானை’?

By செய்திப்பிரிவு

ஆறாவது முறையாக சூர்யா - ஹரி இணையும் படத்துக்கு ‘யானை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யாவை வைத்து ‘ஆறு’, ‘வேல்’, ‘சிங்கம்’, ‘சிங்கம் 2’, ‘சிங்கம் 3’ என 5 படங்களை இயக்கியவர் ஹரி. இந்நிலையில், ஆறாவது முறையாக இவர்கள் இணைய இருப்பதாகவும், அந்தப் படத்துக்கு ‘யானை’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ‘யானை’ படத்தை, ஏவி.எம். புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க இருக்கிறது.

2014-ம் ஆண்டு ரிலீஸான ‘இதுவும் கடந்து போகும்’ படம்தான் ஏவி.எம். தயாரித்த கடைசிப்படம். அனில் கிருஷ்ணன் மற்றும் ஸ்ரீஹரி பிரபாகரன் இணைந்து இயக்கிய இந்தப் படத்தில், சிவாஜி தேவ் ஹீரோவாக நடித்தார். இந்நிலையில், 5 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தைத் தயாரிக்க இருக்கிறது ஏவி.எம்.

சூர்யா நடிப்பில் தற்போது ‘என்.ஜி.கே.’ படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. செல்வராகவன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

‘என்.ஜி.கே.’ படத்தைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘காப்பான்’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. சயிஷா சைகல் ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில், மோகன்லால், பொமன் இரானி, ஆர்யா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

‘காப்பான்’ படத்தைத் தொடர்ந்து ‘இறுதிச்சுற்று’ சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிக்கிறார் சூர்யா. அதன்பிறகே ஹரி இயக்கத்தில் நடிக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

34 mins ago

இந்தியா

48 mins ago

இந்தியா

58 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்